Showing posts with label Journey. Show all posts
Showing posts with label Journey. Show all posts

02 June 2020



இவாஞ்செலின் சரண்யா. அதுதான் அவரின் முழூ பெயர். அக்கா என்பது வெரும் வார்த்தைதான் என்று அதுவரை நினைத்திருந்தேன். ஆனால் அது ஒரு உணர்வு என்பதை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உடன் பிறவாமலே உணர்த்தியவர் சரண்யா அக்கா.

12 May 2020



ஒரே பாய்ச்சலில் அவர்களின் காலில் விழுந்தேன். சுதாகர் சார் என்ன வாழ்த்தினார் என்றெல்லாம் சரியாக காதில் கேட்கவில்லை. விழவேண்டும் என்று தோன்றியது விழுந்தேன். அப்படியே அருள்ராஜ் சாரின் காலிலும் விழுந்தேன்.

05 May 2020



காரில் நான், எனது இடது பக்கத்தில் கஸ்தூரி மாமி, அவருக்கு இடப்புரமாக சத்தியா மாமி, எங்களுக்கு பின்னால் இருக்கையில் அவரது கணவர் பாலு மாமா, தாய்மாமா விஜயகுமார், அவரது மனைவி ரஞ்சினி, அவர்களது மகள் தீபா மற்றும் முன் இருக்கையில் கஸ்தூரி மாமியின் மகளான ராதா ஆகியோர் அமர்ந்திருந்தோம். எனது வலது பக்கத்தில் அர்ச்சனா அமர்ந்திருந்தாள்.

13 June 2018

ஒரு பயனம் -9.

Posted by Vinoth Subramanian | Wednesday, June 13, 2018 Categories: , , , , ,


எந்த ஒரு பார்வைத் திறன் குறையுடையவருக்கும் ஓடுவதில் ஒரு பிரச்சினையும் இருக்காது. அவர்களது ஒரே பிரச்சினை விழுந்துவிடுவோமோ என்ற பயம்தான். எனக்கும் அந்த பயம் இருந்தது அன்று.

06 June 2018

ஒரு பயணம் -8.

Posted by Vinoth Subramanian | Wednesday, June 06, 2018 Categories: , , , ,


நாங்களேதான்.” என்றார் தர்மராஜ்.
ஜி, நாம ட்ராவல் பண்ண அந்த ரூட் மேப்ப குடுக்குரீங்களா? எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.” என்று நான் கேட்டதும் கொடுத்தார். இந்த பதிவை எழுதுவதற்காக நான் அதை எடுத்தபோதுதான் தெரிந்தது.

31 May 2018

ஒரு பயணம் -7.

Posted by Vinoth Subramanian | Thursday, May 31, 2018 Categories: , , , , ,


அதே வியப்புடன் தோழி சுவேதாவுக்கு கூகுல் வாய்ஸ் இன்புட் உதவியுடன் (Google voice input) குருஞ்செய்தியை குரல் வழியில் அனுப்ப முயற்சி செய்தேன். தட்டச்சு செய்ய சோம்பேரித்தனமாக இருந்ததால் அந்த முயற்சி.

26 May 2018

ஒரு பயணம் -6.

Posted by Vinoth Subramanian | Saturday, May 26, 2018 Categories: , , ,


வெளியிலிருந்தவர் என்னை காருக்குள் மிகக் கவனமாக அனுப்பினார். நான் முன்னிருக்கையில் அமர வைக்கப்பட்டேன். பார்வைத் திறன் குறையுடையவரை காரில் அமரவைப்பதும் எளிதுதான்.

15 May 2018

ஒரு பயணம் -5.

Posted by Vinoth Subramanian | Tuesday, May 15, 2018 Categories: , , ,


குட் மார்னிங் எவெரி படி!!! (Good morning everybody)“ திரு அரோராவின் குரல்தான் அது. முழுப்பெயரை மரந்துவிட்டேன். கார் திரளணியின் விதிமுறைகளையும் வழிமுறைகளையும் விளக்க மேடையில் வந்து நின்றார்.

08 May 2018

ஒரு பயணம் -4.

Posted by Vinoth Subramanian | Tuesday, May 08, 2018 Categories: , , ,


இருக்கு. இருக்கு இருக்கு.” என்றார் அந்த பெண்மணி.
அது, நான் கீழயே பாத்துட்டேன். மேலயே இருக்கு வினோத்.” என்று சொல்லி குரித்து கொண்டு சென்றார். அவர் குரலை ஏற்கனவே எங்கேயோ கேட்டேன் என்று முந்தைய பதிவில் சொன்னேன்.

01 May 2018

ஒரு பயணம் -3.

Posted by Vinoth Subramanian | Tuesday, May 01, 2018 Categories: , , ,


அன்னா இங்கதான் வேல செய்யுராரு. அதுதாண் அவர பாக்கவந்தேன்.” என்று சொல்லி நடந்தார். பிறரை பிந்தொடர்ந்து கொண்டே வெளியே நடந்தோம். வெளியில் வந்ததும் ஆட்டோக்கள் அணிவகுத்து நின்று கொண்டிருந்தன.

27 April 2018

ஒரு பயணம் -2.

Posted by Vinoth Subramanian | Friday, April 27, 2018 Categories: , , ,


ஒரு ஐந்து நிமிடம் கழிந்திருக்கும். பாட்டியிடமிருந்து பதில் வந்தது. அந்த முதியவரும் சகஜமாக பேச ஆரம்பித்தார். ஒன்று அந்த பாட்டி பாக்கை அவசர அவசரமாக விழுங்கி இருக்க வேண்டும். இல்லையேல் தற்செயலாக சென்று தொண்டையிலும் மார்பிலும் சிக்கியிருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

25 April 2018

ஒரு பயணம்.-1.

Posted by Vinoth Subramanian | Wednesday, April 25, 2018 Categories: , , ,


ஒரு பயணம் பாதையை மட்டுமல்ல, சில நேரங்களில் வாழ்க்கையையும் நமக்கு காட்டுகிறது. 

அதில் இருக்கும் சின்னச் சின்னத் திருப்பங்களும் ஸ்வாரசியமாக அமையும்போது பிறரிடத்தில் பகிர்ந்துக் கொள்ளத் தோன்றுகிறது. இந்தப் பதிவும் அப்படிப்பட்டதுதான்.

கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி கார் திரளணியில் கலந்துக்கொள்ள ஒரு பார்வையற்றோர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. ஆங்கிலத்தில் car rally என்று சொல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு திருவிழா போன்று நடக்கும் ஒரு பந்தையம்தான் இந்த கார் திரளணி/பேரணி. இதைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதி இருந்தாலும் தமிழில் எழுத ஏற்பட்ட ஒரு சிரு ஆசையின் காரனமாக எழுதுகிறேன். பங்குபெரும் ஒவ்வொரு பார்வைத்திறன் குறையுடையவரும் அகமகிழ்ந்து அனுபவிக்கும் ஒரு திருவிழாதான் இது. அதில் நானும் ஒருவன். பரிசுகள் கிடைக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு அனுபவத்தை வீட்டிற்கு கொண்டுவர முடியும். அதற்காகவே இந்த கார் ராலியை எந்தக்காரனத்திற்காகவும் தவறவிடுவதில்லை.

கடந்த எட்டாம் தேதி நான் தனியாகத்தான் சென்றேன். பொதுவாக நண்பர்களுடன் செல்வேன். இதற்கு முன்பு ஒருமுறைமட்டும் தனியாக சென்ற அனுபவம். அப்போதுகூட தெரிந்த சிலரை பார்க்க முடிந்தது. ஆனால் இது முற்றிலும் வேறு மாதிரியான அனுபவம். சென்னை கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க் என்னும் இடத்தில்தான் கார் ராலி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. காலை எட்டு மணியிலிருந்து எட்டறை மணிக்குள் அங்கிருக்கவேண்டும் என்று சொன்னார்கள். தாமதமானால் கார் கிடைக்காது. அதனாலேயே காலை நான்கு மணிக்கு எழுந்து ஐந்தறை மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பினேன். எங்கள் ஊரிலிருந்து சென்னை கடற்கரைக்கு அந்த நேரத்திற்கு ரயில் கிடையாது என்பதால் ஆவடிவரை அப்பா வந்து வண்டி ஏற்றினார். எங்கள் ஊரிலிருந்து ரயிலில் கிண்டி செல்ல இரண்டு மார்கம் உண்டு. ஒன்று சென்னை சென்ரலில் இறங்கி அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து செல்ல வேண்டும். இன்னொன்று சென்னை கடற்கரை ரயில் நிலையம் சென்று அங்கிருந்து இன்னொரு ரயில் பிடித்து செல்ல வேண்டும். எனக்கு எப்போதுமே இரண்டாம் மார்கம்தான். சென்னை செண்ட்ரலில் இருந்து சாலையை கடந்து செல்லவெல்லாம் எனக்கு இன்னொருவர் தேவை. அதனால் தனியாக செல்வதென்றால் கடற்கரை ரயில் நிலையம்தான்.

அப்பா ஆவடியில் என்னை சென்னை கடற்கரை செல்லும் ரயிலில் ஏற்றிவிட்டு கிளம்பினார். காலை ஆறு பத்து மணிக்கு ரயில் புரப்பட்டது. எப்படியும் எட்டு மணிக்கு சென்றுவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரயிலில் சொல்லிக்கொள்ளும்படி கூட்டமில்லை. திடீரென்று ஒரு தாத்தாவும் பாட்டியும் ஏறினார்கள். வேறேதோ பாஷையில் பேசிக்கொண்டார்கள். நான் அமைதியாக அமர்ந்துகொண்டு எதையோ யோசித்துக்கொண்டே வந்தேன். வண்ணாரைப்பேட்டை அருகே வண்டியை நிருத்தினார்கள். அவ்வளவுதான் பதினைந்து நிமிடங்களுக்கு வண்டி நகரவில்லை. பிறகு எடுத்தான். எதிரிலிருந்த அந்த பாட்டி இரும ஆரம்பித்தார். வழக்கமான இருமல்தான் என நினைத்துக்கொண்டு அமைதியாக வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தேன். இருமல் கடுமையானது. கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இன்னும் மோசமானது. பாட்டியால் பேச இயலவில்லை. எதுவோ தொண்டைக்குள் சிக்கியதுபோல் இருமினார். கிட்டத்தட்ட இரண்டு நிமிடம். ஆனாலும் நிற்கவில்லை. இப்போது மூச்சும் விடமுடியாததுபோல சிரம பட்டார். தாத்தா மட்டும் ஏதோ அந்த பாஷையில் கத்திக்கொண்டிருந்தார். பாட்டியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சொல்லப்போனால் இழுத்துக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்குமேல் இருமவும் முடியவில்லை.
”தண்ணி குடிங்க! தண்ணி குடுங்க!” என்று ஒரு குரல் எனக்கு பின்னால் இருந்து கேட்டது. அது ஒரு பென்ணின் குரல். அதுவரை இருந்த நிசப்தம் ஓடும் ரயிலில் இருந்து இரங்கியது போலிருந்தது.
நான் எனது பையைத்திரந்து தண்ணீரை எடுத்தேன்.
”இந்தாங்க.” என்று நீட்டினேன்.
வாங்கவில்லை. ஒருவேளை அவர்களிடமே இருக்கிறதோ என்னமோ என்று நினைத்துக்கொண்டு தண்ணீர் பாட்டிலை மடிமீது வைத்துக்கொண்டேன். ஒரு சில நொடிகள் மட்டும் அமைதியாக இருந்த அந்த பாட்டி மீண்டும் இடைவிடாது இருமி பின்பு ஏதோ வித்தியாசமான சத்தத்தை ஏற்படுத்தி பயத்தை ஏற்படுத்தினார். இந்தமுறை தாத்தாவிற்கும் என்ன செய்வது என்று புரியவில்லையா? அல்லது ஏதாவது செய்துகொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்பதை மட்டும் பாட்டியின் நிலை தெரிவித்தது.
”மார பிடிச்சு உருவுங்க! சீக்கிரமா!” என்று அதே பெண்ணின் குரல் எனக்கு பின்னால் இருந்து வர. கம்பாட்மெண்ட் கொஞ்சம் கலங்கித்தான் போனது.
சில நொடிகள்தான் தாமதம். அந்த பெண்ணே விரைந்து வந்து பாட்டியின் மார்பையும் முதுகையும் நீவிக்கொண்டிருந்தார். இப்போது பாட்டியால் மூச்சுவிட முடிந்தது. ஆனால் இருமல் மட்டும் நிற்கவில்லை.
வண்டி ராயபுரத்தை தாண்டியது. நன்றாக பேசிக்கொண்டு வந்த பாட்டிக்கு என்ன ஆனது என்று என்னைப்போல் எல்லோருக்கும் குழப்பம்தான். ஒருவழியாக விஷையத்தைக் கண்டு பிடித்த அந்த முதலுதவி செய்த பெண்,
”பாக்கு சாப்டாங்களா? அதுதான் சிக்கிடுச்சா?” என்று கத்தினார்.
”எதுக்குதான் இதெல்லாம் பண்ணுராங்களோ? தேவையா? இல்ல தேவையானு கேக்குரேன். பாக்கு போடுரது, தண்ணி அடிக்குரது, சிகுரட் பிடிக்குரது அப்புரம் இப்பிடி கஷ்ட படுரது. இதெல்லாம் தேவையா?” என்று பின்னால் இருந்து கத்திக்கொண்டிருந்தார்.
இந்த முறை பாட்டி ஒரு பத்து வினாடிகள் இருமிவிட்டு பிறகு ”உ” என்று இழுக்க, தாத்தாவின் எந்த கேள்விக்கும் பதில் வரவில்லை.
மீண்டும் ஒரு இனம் புரியாத நிசப்தம் வண்டிக்குள் ஊடுருவியதை உணர முடிந்தது.
தொடரும்.

31 August 2016

TWO FACES (2)

Posted by Vinoth Subramanian | Wednesday, August 31, 2016 Categories: , , , ,

Hi readers! Thank you very much for supporting the first part of this post. Sorry for offering you such a lengthy post. I was unable to shrink it. New readers are requested to kindly proceed to the previous post to understand this post better.
Previous post

14 January 2016

THOSE FOURTEEN DAYS (5)

Posted by Vinoth Subramanian | Thursday, January 14, 2016 Categories: , , , ,


“Who are you sir?” Partha Saradhi sir looked at Mr. Kannan and enquired.
“I am Kannan, service engineer, working in general administrative department. I just came to drop him.”
“You may go sir. We’ll take care of him.”
He left.
“So, you’re Vinoth. Am I Right?”
“Yes sir.”
“We’ve got a complaint from general administrative department that you can’t work without system. So, we transfer you.” He casually said.

10 January 2016

THOSE FOURTEEN DAYS (4)

Posted by Vinoth Subramanian | Sunday, January 10, 2016 Categories: , , ,


We had desire. We had expectation. We had fear on that day but, didn’t have much hope. We went to the same place without any invitation, without any calls, without any messages and without any information. We found no difference in IOB central office. Once again we had to start from the beginning.

29 December 2015

THOSE FOURTEEN DAYS (3)

Posted by Vinoth Subramanian | Tuesday, December 29, 2015 Categories: , , , ,



September 3 2015 didn’t depict any difference from previous days. One more day, one more journey! My mother had got the news from either of them. I didn’t tell anything. No need to say that she was unhappy after hearing it.
“Pack my belongings. Let me come to leave. This must be my last day in this house.” I told my mother and hanged the bag on my shoulder.

21 December 2015

THOSE FOURTEEN DAYS (2)

Posted by Vinoth Subramanian | Monday, December 21, 2015 Categories: , , , ,



The day (02-09-2015) had arrived for me to proceed. We picked out the file from the bag, which was filled with certificates. It was not heavy to carry. At the same time, I had to carry some expectations and excitements with me. 

14 December 2015

THOSE FOURTEEN DAYS. (1)

Posted by Vinoth Subramanian | Monday, December 14, 2015 Categories: , , , ,



From 1st September 2015 to 14th September 2015.
Every journey begins to halt somewhere. And, every halt sets up a new journey. For some travelers, it’s mandatory. For some travelers, it’s an option. For few, it’s fun. For few, it’s an experience. But, for me it was a search. A real search. I thought I was traveling from learning to earning. I was traveling from nothing to something. I was traveling from questions to answers.

16 June 2015

WHERE DO THEY COME FROM?

Posted by Vinoth Subramanian | Tuesday, June 16, 2015 Categories: , , , ,


Day before yesterday, National federation of blind (NFB) conducted the car rally accompanied by Madras motors sports club (MMSC). More than 90 visually challenged participated. They were called navigators. Apart from them, many other workers participated. I went for the first time. Mohan raj called me. He already registered my name. He took Suganya also with him.

11 April 2015

SHOULD I TELL THIS TO MY PARENTS?

Posted by Vinoth Subramanian | Saturday, April 11, 2015 Categories: , , ,

“Do you have vision or not?” somebody was asking someone in the train while I was travelling to Beach station yesterday. I was tending on the iron-wall of the train. Twenty minutes ago, my friend Thameem had called me but I couldn’t pick for I was in the certificate counter to receive my original documents for the purpose of bank job. I thought of calling him after boarding.
“Open your mouth and say. Do you have vision or not?” the person continued.
He might have asked it for more than five times I think. I was wondering like, whom is he asking?
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube